![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/11/mai.jpg?fit=650%2C433&ssl=1)
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 31 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.