கடந்த வாரம் 9545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து 3107 பயணிகளும் ரஷ்யாவில் இருந்து 774 பயணிகளும் பிரிட்டனில் இருந்து 764 பயணிகளும் வருகை தந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனி, பாகிஸ்தான், மாலைதீவு, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
நாடு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் சுற்றுலாத்துறை பெரும் பங்காற்றும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.