July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவனல்லை பிரதேச சபை பிரதித் தவிசாளர் உட்பட மூவர் கைது!

மாவனல்லை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பியதிஸ்ஸ மற்றும் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனல்லை பிரதேச பாடசாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர்- ஆசிரியர் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, இவர்கள் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரதேச சபை பிரதித் தவிசாளர் மற்றும் அச்சுறுத்திய பிரதேச சபை உறுப்பினர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.