July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலை: மரண எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 23 மாவட்டங்களில் 62,247 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 18 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அத்துடன் அனர்த்தங்களில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் 4 உயிரிழப்புக்களும், கேகாலை மாவட்டத்தில் 3 உயிரிழப்புக்களும், புத்தளம் மாவட்டத்தில் 3 உயிரிழப்புகளும், குருநாகல் மாவட்டத்தில் 2 உயிரிழப்புக்களும், கம்பஹா, மாத்தளை, முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.