July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 19 பேர் சிலாபம் கடற் பகுதியில் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 19 பேரை கைது செய்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிலாபம் கடற்கரை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், 16 ஆண்களும் 1 பெண் மற்றும் 4 சிறுவர்கள் உள்ளடங்கலாக 19 பேர் அடங்குவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பயணித்த சிற்றூர்ந்து ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்