July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘குற்றப் புலனாய்வுத் துறைக்கு சென்றால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா்’

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் தொடா்பில் இணையத்தளத்தில் தேடும்போது, அதில் நனோ யூரியா என்ற தகவல்களே கிடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளாா்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இன்று (09) காலை விவசாயத்துறை அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே, ஊழல் சந்தேகம் தொடா்பான தமது கருத்துக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிடப்போவதாக கூறியமை தொடா்பிலேயே ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டாா்.

இதேவேளை, இந்தியாவின் நனோ நைட்ரஜன், இந்தியாவில் 480 ரூபாவாக விலை குறிக்கப்பட்டுள்ளது. டொலரில் பாா்க்கும் போது 6 டொலா்கள். எனினும் இலங்கை அதனை 25 டொலா்களுக்கு கொள்வனவு செய்கிறது.

இது தொடா்ந்தும் இடம்பெறுமானால் 8000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினாா்.

இதேவேளை, சீனாவின் சேதனைப் பசளையை 92 ரூபாவுக்கு கொள்வனவு செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் முழுமையான செறிவுடன் உற்பத்தி செய்யும்போது, 30 ரூபாவுக்கு விவசாயிகளால் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே உள்ளூரில் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய வழி இருக்கும்போது ஏன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்பதே தமது கேள்வியாக உள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டாா்.

எனவே தமது இந்த கருத்துக்களுக்கு எதிராக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தால் அதனை எதிா்கொள்ளத் தாம் தயாா் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தாா்.