June 14, 2025 22:59:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அனர்த்த நிலைமையை அறிவிக்க ‘117’ ஐ அழுத்தவும்’

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் எப்பாகத்திலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

நிலவும், அசாதாரண நிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம்கொடுக்க தயாராக இருப்பதாகவும் குறித்த நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.