July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தின் மூன்று இடங்களில் காணி அளவீட்டு நடவடிக்கைகள் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டன

யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி ஜெ 10 கிராம சேவகர் பிரில் 7 பரப்பு காணியும், மண்கும்பான் ஜெ 11 கிராம சேவகர் பிரில் 8 பரப்பு காணியும் மற்றும் புங்குடுதீவு ஜெ 24 கிராம சேவகர் பிரில் 14.2 ஏக்கர் காணியும் கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட இருந்தது.

இருப்பினும், குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

This slideshow requires JavaScript.