July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன உர நிறுவனம் இலங்கையிடம் 8 மில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி கடிதம்

சீனாவின் சேதன உர நிறுவனம் இலங்கையிடம் 8 மில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை உர இறக்குமதியை இரத்து செய்தது.

சீன இறக்குமதியை இரத்துச் செய்யும் விடயத்தில் ஈடுபட்ட அரச அதிகாரி ஒருவருக்கு எதிராகவே, குறித்த நிறுவனம் நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகத்திடம் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரியுள்ளது.

குறித்த இறக்குமதி இரத்து செய்யப்பட்டதால் தமது நிறுவனத்தின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக சீன நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் அதிகாரிக்கு ஆதரவாக, இலவசமாக வழக்காட முன்னணி சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்.