July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிறில் காமினி ஆயரைக் கைது செய்யும் தீர்மானம் இல்லை’: நீதிமன்றத்துக்கு அறிவித்தது சிஐடி

சிவில் செயற்பாட்டாளரான சிறில் காமினி ஆயரைக் கைது செய்யும் எவ்வித தீர்மானமும் இல்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சட்டமா அதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு இதனை அறிவித்துள்ளனர்.

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சிறில் காமினி ஆயர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் திணைக்களம் சிஐடியின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

சிறில் காமினி ஆயர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட கருத்தை அடிப்படையாக வைத்து, தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிஐடியில் முறையிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடு மீதான விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.