June 11, 2025 21:24:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரணிலிடம் நாட்டை ஒப்படைத்தால் 48 மணித்தியாலங்களில் விலைகள் குறையும்”: வஜிர அபேவர்தன

File Photo

ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டை ஒப்படைத்தால், 48 மணித்தியாலங்களில் அவர், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறைத்துக்காட்டுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுபவம் இருக்கின்றது என்று வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்போற்கும் போது, தற்போது உள்ளதை போன்று வீழ்ச்சியடைந்த பொருளாதாரமே இருந்தது எனவும், அவ்வாறான பொருளாதாரத்தை அவர் உயர்த்திக் காட்டினார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கூறியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.