July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஐவர் மரணம்!

File Photo

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால், 12 மாவட்டங்களில் 1143 குடும்பங்களை சேர்ந்த 4391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.