July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபிவிருத்தி செய்யப்பட்ட 1500 வீதிகள் திறந்து வைப்பு!

இலங்கையில் 100,000 கிலோ மீற்றர் நீளமான சகல உள்ளக, கிராமப்புற மற்றும் இடைப்பாதைகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ரகெட்டிய மைதானத்தில்  இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது.

பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றுக்கு  வாகன நெரிசலின்றி வசதியாக செல்லக் கூடிய வகையில்  இந்த வீதிகள் நிர்மாணிக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1,500  வீதிகள்  ‘சுபீட்சத்தின்  வீதிப் புரட்சி. பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள்’ எனும் தொனிப் பொருளின் கீழ்  ஒரே நாளில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டிலுள்ள  அனைத்து மாவட்டங்கள் மற்றும்  தேர்தல் தொகுதிகளை  உள்ளடக்கி இந்த 1500 வீதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வீதிகள் அனைத்தும் 3 மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக 1500 வீதிகளை 3 மாத காலத்தினுள் நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  குறிப்பிட்டார்.