July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணப் பையில் இருந்த சடலம்; மேலதிக தகவல்களை வெளியிட்டது பொலிஸ்

சபுகஸ்கந்த- மாபிம பகுதியில் பயணப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இன்று கைது செய்ய முடியும் என்று மேல் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட சடலம், மாளிகாவத்தை பிரதேச பெண் ஒருவர் என்பது உறுதியாகியுள்ளது.

கொலைச் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த 8 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் வட்டிக்கு பணம் கொடுக்கல்- வாங்கல் செய்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.