July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசை

நாட்டின் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 3000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், பொதுமக்களால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், தற்போது எரிவாயுவுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் உள்ள சிக்கல் நிலை இன்னும் சில தினங்களில் சீராகும் என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.