July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பதவி வழங்கப்பட்டதை வைத்து போராட்டங்களைக் கைவிட மாட்டேன்’: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

பதவி வழங்கப்பட்டதைக் காரணமாக வைத்து போராட்டங்களைக் கைவிட மாட்டேன் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் உரிமைகளுக்காகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்த தேரருக்கு பதவி வழங்கப்பட்டதால் அமைதி அடைவார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

எவ்வகையான பட்டம் பதவிகள் வழங்கப்பட்டாலும், நாட்டுக்கான, மக்களுக்கான போராட்டங்களைக் கைவிடப் போவதில்லை என்று தேரர் பதிலளித்துள்ளார்.

இந்த நியமனம் தனது குரலை அடக்குவதற்கு வழங்கப்பட்டது என்ற விமர்சனத்தை தேரர் மறுத்துள்ளார்.