July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சினோபார்ம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்

முழுமையாக சினோபார்ம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, 6 மாதம் பூர்த்தியாகும் முன்னர் பூஸ்டர் டோஸ் வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்துள்ளது.

வைத்திய நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சில வைத்தியர்கள் சினோபார்ம் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் டோஸ்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

எனினும், சினோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் மூன்று மாதங்களுக்கு பிறகு குறைவடைவதாக இலங்கை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ராஜீவ் டி சில்வா தெரிவித்துள்ளார்.