July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சபாநாயகர்- இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்கவும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.