
அடி வயிற்றில் போதைப்பொருட்களை மறைத்து வந்த கென்யாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் உடலைப் பரிசோதிக்கும் போது, உடம்புக்குள் மறைத்து வைத்துள்ள போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொகைன் வகை போதைப்பொருள் அடங்கிய 50 வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
39 வயதுடைய கென்ய பிரஜை எமிரேட்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளார்.