July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். – கொழும்பு ரயில் சேவை நவம்பர் 3 ஆம் திகதி ஆரம்பம்!

Train Common Image

யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை எதிர்வரும் 3 ஆம் திகதி புதன்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ளது என யாழ். ரயில் நிலைய பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக நாடு பூராகவும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அவ்வேளையில், யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

கல்கிஸை – காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 3 ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை 5.30 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் காங்கேசன் துறையை வந்தடைந்து மறுநாள் 4 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு பயணிக்கவுள்ளது

எனினும், முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.எனவே, எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் ரயில் சேவையானது வழமை போல் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது” என்று ரி.பிரதீபன் தெரிவித்தார்.