July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரு நாடு – ஒரு சட்டம்’: செயலணி குறித்து நீதி அமைச்சர் அதிருப்தி!

பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ என்ற செயலணி அமைக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

குறித்த செயலணியை உருவாக்குவது குறித்து தன்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட செயலணியொன்று சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டது.

அதன் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதுடன், அதன் ஏனைய உறுப்பினர்களில் நான்கு முஸ்லிம்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தக் குழு குறித்து தான் மகிழ்ச்சியடையவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அலிசப்ரி இது தொடர்பில் தெரிவித்திருந்தாகவும் கூறப்படுகின்றது.