July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறையில் வன்முறைக்கு தயாராகிக் கொண்டிருந்த 13 பேர் கைது

யாழ்ப்பாணம்,வல்வெட்டித்துறை- நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின்கள், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை சனிக்கிழமை (30) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.