May 28, 2025 15:26:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது!

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.