July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.

இந்த தீவிர சிகிச்சை பிரிவினை பேராசிரியர் பி.டி.ஆர். மகுலொழுவா திறந்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், துறைசார் வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பல்வேறுபட்ட அமைப்புகள் மற்றும் தனவந்தர்களின் உதவியில் இந்த தீவிர சிகிச்சை பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.