களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அக்கமஹா பண்டிதர் கலாநிதி வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியையை முன்னிட்டு, அரசாங்கத்தினால் ஒக்டோபர் 31 ஆம் திகதி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி இறுதிக் கிரியை நடைபெறும் தினத்தை குறித்த இரண்டு மாவட்டங்களுக்கும் துக்கதினமாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மற்றும் இறைச்சிக் கடைகளும் 31ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.