July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு 31 ஆம் திகதியுடன் நீக்கம்!

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணியுடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, உயர்தரங்களுக்கான பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் ஆராயுமாறும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
-(3)