June 1, 2025 23:52:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர் பொலிஸ் அதிகாரிகள் 6 பேருக்கு இடமாற்றம்!

இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 6 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, காலி மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் முல்லேரியா,  மொனராகலை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.