June 14, 2025 11:07:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லைத் தாண்டிய தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடல் எல்லையில் கைதான தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும் அதிலிருந்த 23 மீனவர்களையும் கடற்படையயினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் தமிழக மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை 23 தமிழக மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்படுவர்.