October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெமட்டகொடை பகுதியில் ஒரு மில்லியன் யூரோ போலி நாணயத்தாள் மீட்பு!

தெமட்டகொடை பகுதியில் ஒரு மில்லியன் யூரோ போலி நாணயத்தாள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் தெமட்டகொட பாலத்திற்கு அருகில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒருவருக்கு விற்பதற்கு தயாராக இருந்த ஒரு மில்லியன் யூரோ போலி நாணயத்தாள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.