July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறில் காமினி ஆயருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக அழைப்பு

சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறில் காமினி ஆயருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சுரேஷ் சலே மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமையவே, சிறில் காமினி ஆயர் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றில் சிறில் காமினி ஆயர் வெளியிட்ட கருத்து தொடர்பில், சுரேஷ் சலே சிஐடியில் முறையிட்டுள்ளார்.

அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிஐடி இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.