May 27, 2025 18:06:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ஷர்மிலா ராஜபக்‌ஷ

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஷர்மிலா ராஜபக்‌ஷ நாளை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இவர் ஜனாதிபதி செயலகத்தின் சமூக ஊடக பிரதானியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த இஷினி விக்ரமசிங்க பதவி விலகியதில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஷர்மிலா நியமிக்கப்பட்டுள்ளார்.