![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/maxresdefault-2-e1635234611391.jpg?fit=1024%2C576&ssl=1)
விவசாய அமைச்சின் பொறுப்புகளில் இருந்து பேராசிரியர் புத்தி மாரம்பேவை நீக்க விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சின் கொள்கைத் திட்டமிடல் ஆணைக்குழுவின் தலைவராகவும், அமைச்சின் ஆலோசகராகவும் பேராசிரியர் புத்தி மாரம்பே செயற்பட்டு வருகிறார்.
அரசாங்கத்தின் சேதன உர திட்டத்தை விமர்சித்ததாக பேராசிரியர் புத்தி மாரம்பே மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் புத்தி மாரம்பே பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் 33 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
பேராசிரியர் புத்தி மாரம்பே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தின் சேதன உர திட்டத்தை விமர்சித்ததை பலரும் விவசாய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.