
இலங்கைக்கு 2022 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிங்கப்பூரின் M/s Vitol Asia Pte. Ltd என்ற தனியார் நிறுவனத்துக்கே இந்த நீண்டகால எரிபொருள் இறக்குமதி ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.
எட்டு மாத காலத்திற்கான பெட்ரோல் (92 Unl) 1,341,000 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் பெட்ரோல் (95 Unl) 459,000 + 10/- 5% பீப்பாய்களையும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 + 10/- 5% பீப்பாய்களையும் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விலை மனுத்தாரர்களிடம் போட்டி விலை மனு கோரப்பட்டிருந்தது.