June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிபர் – ஆசிரியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில்!

சம்பள முரண்பாட்டுப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டங்களை தொடர்வதற்கு அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டாலும், வேறு கடமைகளில் ஈடுபடாது புதிய வடிவில் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை தொடரவுள்ளதாக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பான அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தீர்மானங்கள் வருமாறு,

  • நிகழ்நிலைக் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருத்தல்.
  • சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் உத்தியோகபூர்வ கடமைகளை செய்யாதிருத்தல்.
  • சுகாதார நலன்பேண் விடயங்களை செய்யாதிருத்தல்.
  • மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுத்தரும் செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருத்தல்.
  • திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளை தவிர்த்தல்.
  • கூட்டங்களை ஏற்பாடு செய்தல், கலந்து கொள்வதை தவிர்த்தல்.
  • மதியம் 1.30 பின்னர் ஆசிரியர் கலந்துரையாடல், அதிபர் கூட்டங்கள், வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதிருத்தல்.
  • மதியம் 1.30 பின்னர் கற்றல் தொடர்புடைய வெளிவாரியான செயற்பாடுகளை தவிர்த்தல்.
  • பாடசாலைக்கு வெளியே போட்டிகள், பயிற்சிகள், கருத்தரங்குகள், கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்தல்.
  • 1.30 பின்னர் கருத்தரங்குகளில் பங்கு பற்றுவதை தவிர்த்தல்.
  • பாடசாலையில் விழாக்கள் ஏற்பாடு செய்வதை தவிர்த்தல்.
  • வலய, கோட்ட கல்வி காரியாலயத்திற்கு தகவல் வழங்குவதை தவிர்த்தல்.
    தர நிலை 8இன் படி கடமை செய்யாதிருத்தல்.
  • வருடாந்த, ஐந்தாண்டு திட்டங்களை தவிர்த்தல்.
  • பொருட்கள் கணக்கெடுப்பு, கணக்காய்வு செய்வதை தவிர்த்தல்.
  • பாடசாலை முடிந்த பின் கடமை செய்வதை தவிர்த்தல்.
  • பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டங்களை தவிர்த்தல்.
  • அரச கடமைக்கு தனிப்பட்ட சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல்.

அதிபர் ஆசிரியர்கள் கடமைகள்

  • வரவு புத்தகத்தில் கையொப்பமிடல்.
  • நேர அட்டவணைக்கேற்ப கற்பித்தல்.
  • வரவு இடாப்பு, பாடப்புத்தகம் தொடர்புடைய வேலைகளை செய்தல்.
  • மாணவருடன் தொடர்புடைய ஒழுக்கம், உளவியல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.