June 2, 2025 3:47:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வுவனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகள்!

வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் (22) பெய்த கடும் மழை மற்றும் காற்றினால் 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் அழிவடைந்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை காரணமாக கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வவுனியா இராசேந்திரங்குளம், சூடுவெந்த புலவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், சில வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, அரபாத் நகர் பகுதியில் வீசிய கடும் காற்றினால் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாசி போன்ற பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.