July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையினர் இவர்களைக் கைது செய்து, நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாகப்பட்டினம் கடற்படையினர் இவர்களை இன்று அதிகாலை வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இருவர் மீதும் வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

சந்தேகநபர்கள் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதி துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.