July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எனது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் என்னை கொள்ளைக்காரனாய் சித்தரிக்க முயற்சிக்கின்றனர்”: பிள்ளையான்

தனது வளர்ச்சியைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாது தற்போது தன்னை ஒரு கொள்ளைக்காரனாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

கடந்த காலத்தில் அரசியலில் இருந்து வெளியேற்றவென என்னை சிறையில் அடைத்தவர்கள், நான் தற்போது மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளேன் என்பதற்காக அதனை சகித்துக்கொள்ள முடியாதே இவ்வாறு செயற்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையயாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் தனது உரையில், என்னை பற்றி பேசியுள்ளார். என்னிடம் மண் அகழ்வு பத்திரம் இருப்பதாக பொய்யை கூறியுள்ளார். அதற்கான ஆதாரமாக சில விடயங்களை முன்வைத்துள்ளார். ஆனால் அது வேறு ஒரு நபர். அவர் நான்தான் என என்னை குற்றவாளியாக்க முயற்சித்துள்ளார்.” என சந்திரகாந்தன் எம்.பி அதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியலுக்காக பொய்களை கூறாது பொறுப்பு வாய்ந்தவர்களாக பேச வேண்டும். சாணக்கியன் எம்.பியுன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மண் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை மறந்துவிட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணசபை தேர்தலில் போட்டியிட தயாராக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் இன்று முன்வந்து போராடுகின்றனர். மாகணசபை தேர்தல் இல்லாமல் போகவும் அவர்களே காரணம் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.