May 31, 2025 20:18:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

இலங்கை முழுவதுமுள்ள அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளையும் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி, 25 ஆம் முதல் குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கங்கள் 25 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு சென்று கற்பித்த நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.