May 29, 2025 21:45:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘கறுப்பு பூஞ்சை’ நோயினால் முதலாவது மரணம் பதிவு!

இலங்கையில் ‘கறுப்பு பூஞ்சை’ நோயினால்  நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி நாட்டில் குறித்த நோய் தொற்றினால் ஏற்பட்ட முதலாவது மரணமாக இது பதிவாகியுள்ளது.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குறித்த நபர் ‘கறுப்பு பூஞ்சை’ நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த நபர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் ‘கறுப்பு பூஞ்சை’ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னரான விளைவுகளால் ‘கறுப்பு பூஞ்சை’  நோய் உண்டாகுமென வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.