July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பூரான் கடித்து இரண்டரை மாதக் குழந்தை உயிரிழப்பு!

பூரான் கடித்து இரண்டரை மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையின் முந்தல் பகுதியில் பதிவாகியுள்ளது.

படுக்கையில் வைத்தே குழந்தையை பூரான் கடித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இரவு தாயுடன் குழந்தை உறங்கிய நிலையில், காலையில் குழந்தை அசைவின்றி இருந்தாகவும், இதன்போது குழந்தையின் முதுகில் காயமொன்று இருந்ததை அவதானித்தாகவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளையில் அந்தக் குழந்தை உயிரிழந்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குழந்தை உறங்கிய இடத்தில் இருந்து பூரான் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விஷப் பூச்சி கடித்தே குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது