May 30, 2025 22:45:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் தினம் தொடர்பான அறிவித்தல்!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் கடந்த முதலாம் திகதியுடன் தளர்த்ப்பட்டது. அதனை தொடர்ந்து மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாட்டை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஒக்டோபர் 21 ஆம் திகதியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்ட போதும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அதனை 31 ஆம் திகதி வரையில் நீடிக்க தீர்மானிக்கப்பட்டது.