June 17, 2025 18:19:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியது தொடர்பில் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியது தொடர்பில் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உயர் நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.