July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கடலில் காணாமல் போயிருந்த இந்திய மீனவரின் சடலம் மீட்பு!

File Photo

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் படகுக் கவிழ்ந்து காணாமல் போயிருந்த இந்திய மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயற்சித்த வேளையில் குறித்த படகு விபத்துக்கு உள்ளானதுடன், இதில் தமிழகத்தை சேர்ந்த ராஜ்கிரன் என்ற மீனவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து குறித்த மீனவரை தேடும் பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சடலாம் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை படகு விபத்துக்கு உள்ளான போது, படகில் இருந்து இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டிருந்ததுடன், அவர்களை கடற்படையினர் காரைநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.