May 28, 2025 23:37:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மேலும் நீடிப்பதற்கு கொவிட் தடுப்புச் செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தளர்த்தப்பட்டது.

எனினும் தொற்று அச்சுறுத்தல் தொடர்வதால், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை ஒக்டோபர் 21 ஆம் திகதி வரையில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அதனை இம்மாத இறுதி வரையில் நீடிப்பதற்கு கொவிட் தடுப்பு செயலணியின் முடிவு செய்யப்பட்டுள்ளது.