July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாட்டுக்கு அரிசி வழங்கும் விவசாயிகள் வீதியில்”: ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பற்றாக்குறையை முன்னிறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

குருநாகல் தேர்தல் தொகுதியின் வெல்லவ பிரதேசத்தில் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

“நாட்டுக்கு அரிசி வழங்கும் விவசாயிகள் வீதியில்” எனும் கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய அமைச்சரின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேயசிங்க மற்றும் ஜெ.சி. அலவதுவல ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.