July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் பலத்த கூட்டணியை உருவாக்கவே முயற்சிக்கின்றோம்’

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் வேண்டும் என்பது சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் நிலைப்பாடாக உள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் கூட்டணியை உருவாக்கவே நாமும் முயற்சிக்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடு பூராகவுமிருந்து எழுந்துள்ளது. இந்த நாட்டில் சரியான ஆட்சியை கொண்டு சென்றவர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் மக்கள் மத்தியில் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர்,

மாகாணசபை தேர்தலை தனித்து சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் உள்ளது.அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் சிலர் உள்ளனர்.எனினும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டதுடன்,

இது குறித்து விரைவில் தீர்மானம் எடுப்போம்.ஆனால் கட்சியினதும் கட்சி ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு என்னவோ அதனையே நாம் முன்னெடுப்போம் என்றார்.