![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/PHOTO-2021-10-19-18-21-45.jpg?fit=1024%2C576&ssl=1)
வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, ஒக்டோபர் 11 ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார்.
இதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் வடக்கு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார்.