கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கக் கட்டிகளைக் கடத்த முயற்சித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு சேவைப் பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 48 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4.8 கிரோ கிராம் எடையுடைய தங்கக் கட்டிகளின் பெறுமதி 70 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.