July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா மீட்பு: பெண் ஒருவர் கைது!

மன்னார் பேசாலை பகுதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் பண்டுள்ளவீரசிங்கவின் பணிப்பில் விசேட பொலிஸ் குழுவொன்று பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதுடன், இது தொடர்பில் சந்தேகத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கஞ்சா பொதிகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.