July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டு. கரடியனாறு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகததில், உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் கைதாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நண்பர்கள் இருவரும் சம்பவதினமான நேற்று இரவு, வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மது அருந்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தனது நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும், பின்னர் இன்று காலையில் நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பன் கொல்லப்பட்டமை தொடர்பில் தெரிவித்ததாகவும் கைதான நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை முன்னெடுக்கப்படுவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.